கும்பலால் தாக்கப்பட்ட இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

 

ஜவ்பர்கான்-

 

கும்பலொன்றினால் கடுமையாக தாக்கப்பட்ட இருபாடசாலை மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

இன்று கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சை இறுதிநாளாகும்.இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது சந்தோசத்தை வீதியில் இறங்கி கொண்டாடிக் கொண்டிருந்தபோதே கும்பலொன்று இவர்களை கடுமையாக தாக்கியதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் இருவரே கடுமையாக காயமடைந்துள்ளனர்.ஏனையவர்கள் தப்பியோடிதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.