மலையக ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது!

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது. 

images

இகலகோட்டை – பலன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நேற்று இரவு முதல் மலையக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

எதுஎவ்வாறு இருப்பினும் பாதை சீர் செய்யப்பட்டு தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து செல்லும் ரயில்கள் ரம்புக்ன வரையிலும் பதுளையில் இருந்து புறப்படும் ரயில்கள் கடுகன்னாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.