தொழிற்சங்கங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவதானம்:நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை !

Maithri_6_3

இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பில் அரச மற்றும் தனியார் பிரிவு தொழிற்சங்கங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார். 

இதன்படி இது குறித்து கலந்துரையாட குறித்த தரப்பினருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இத்தாலியில் இருந்து அவர் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளன.