திருகோணமலை அக்போர பகுதியில் விபத்தில் ஒருவருக்கு பலத்த காயம்!

எப்.முபாரக்                   

திருகோணமலை அக்போபுர பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலையில் மோதி  முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விழந்ததில் முச்சக்கரவண்டியில் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                          

  விபத்தில் காயங்களுக்குள்ளானவர் கந்தளாய் தல்கஸ்வெவவைச் சேர்த ரத்தனவீர வயது(48)எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                           

வீதியில் விலகமுற்பட்ட வேளையில் முச்சக்கரவண்டியும், உழவு இயந்திரமும் மோதிதில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                             

உழவு இயந்திரத்தின் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.