நத்தாரை முன்னிட்டு மட்டு.சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்!

ஜவ்பர்கான்

 

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.சிறைச்சாலைகள் திணைக்கள அனுசரணையுடன் சிறைச்சாலை ஐக்கியம் அமைப்பு இதனை வழங்கியுள்ளது.

 

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தலைமையில் இன்று சிறைச்சாலை மண்டபத்தில் நடைபெறற வைபவத்தில் சிறைச்சாலை ஐக்கியம் அமைப்பு இணைப்பாளர் எஸ்.ஜோசப் சிறைச்சாலை பிரதம ஜெயிலர் கே.பிரபாகரன் நலன்புரி அதிகாரி எல்.ஜெயசுதாகரன் உட்பட மதத்தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

சிறைக்கைதிகளின் பாடசாலைகளில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான புதிய ஆண்டிற்குரிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மத போதனைகளும் இடம் பெற்றன.

S3020007_Fotor S3020030_Fotor S3020008_Fotor