கொழும்பு மாநகர சபையின் 150 வருட பூர்த்தி விழா; சர்வதேச மேயர்கள் மாநாடு!

செயிட் ஆஷிப்
கொழும்பு மாநகர சபையின் 150 வருட பூர்த்தி விழா இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வாக சர்வதேச மேயர்கள் மாநாடு இன்று ஞாயிறு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
“எதிர்கால நகரங்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற இம்மாநாட்டில் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மில், கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் உட்பட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாநகர மேயர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். 
20151213_103640_Fotor 20151213_103652_Fotor