திருகோணமலை கிண்ணியாவில் கசிப்பு வைத்திருந்தவருக்கு பிணை!

எப்.முபாரக்                      

இரண்டு லீற்றர்  கசிப்பு  வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிண்ணியா பைஸல் நகரைச் சேர்ந்த 45 வயதான நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், சனிக்கிழமை (12)  உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர், கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த நபரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போது, இவரிடமிருந்து குறித்தளவு கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.