துருவம் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் ஊடகச் செயலமர்வு!

 

-எம்.வை.அமீர் – 

துருவம் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் ஊடகச் செயலமர்வு 12.12.2015 சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

 நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் கௌரவ அதிதியாக கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதல்களை வழங்கிவைத்தனர்.

1_Fotor

 இம் முழு நாள் ஊடகச் செயலமர்வில் சுடர் ஒளி பத்திரிகையின் அம்பாறை மாவட்ட ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர்,, பிரபல வானொலி-தொலைக்காட்சி சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ,மீள் பார்வை பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சிராஜ் மசூர்,நவமணி பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஏ.ஜே.எம்.பிரவ்ஸ். ஊடகவியலாளர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரைகளையும்  செயன்முறை பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கினர். 

மேலும், ஊடகம் சார்ந்த உப தலைப்புகளுடனான சிறு விளக்கவுரைகளும் இங்கே இடம்பெற்றது.

இளைஞர்,யுவதிகள், மாணவர்கள்,ஊடகவியலாளர்கள், ஊடகத்துறையில் பணியாற்ற விரும்புகின்றவர்கள்மற்றும் ஊடகத் துறை சார்ந்து மேலதிக அறிவை விருத்தி செய்து கொள்ள விரும்புபவர்கள் என பலரும் இந்த முழு நாள் ஊடகச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.

6_Fotor
2_Fotor