திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் கொலை செய்தவருக்கு ஏழு வருட கடூழிய சிறை!

 

எப்.முபாரக்                  

 

கடந்த 2000ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் கூரான கத்தியால் ஒருவரை வெட்டிக் கொலை செய்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் ஏழு வருட கடுழிய சிறைதண்டனை விதித்து புதன்கிழமை (9)தீர்ப்பளித்துள்ளது.        

      திருகோணமலை, வெள்ளைமணல்,கரடிப்பூவ,பகுதியைச் சேர்ந்த கந்தசாமி ஈஸ்வரன் வயது(49)என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.                          

வெள்ளைமணல் பகுதியில் கசிப்பு வடிசாராயம் காய்த்து விற்பனை செய்து வந்த நிலையில் பொலிஸாருக்கு காட்டிக்கொடுத்ததாகக் கூறி புதுமாதாஸா அன்டனிதாஸ என்பவரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சீனக்குடா பொலிஸாரினால் குறித்த சந்தேக நபருக்கெதிராக தொடரப்பட்ட வழக்கில் குறித்த சந்தேக நபரை குற்றவாளியாக இணங்கண்டு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் தீர்ப்பளித்தார்