திருகோணமலையில் சடலத்தை தேடும் வான்படையினர்!

 எப்.முபாரக்   

திருகோணமலை அப்பால் உள்ள கடலில் மிதப்பதாக கூறப்படும் மனித சடலங்களை கண்டு பிடிப்பதற்காக வான் படையில் உதவி கோரப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வான் படையின் வை 12 ரக வாநூர்தி குறித்த பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வான்படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இந்த சடலங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், இதுவரை எந்த சடலங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இதேவேளை, முன்னர், திருகோணமலை நிலாவெளி பிரதேச கடற்பிராந்தியத்தில் சடலம் ஒன்று ஒதுங்கியிருந்தது.
இந்த சடலம், தென் இந்திய வெள்ளத்தில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரின் சடலமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.