தூதரகங்களில் தொடரும் துஸ்பிரயோகங்களையும், புறக்கணிப்புகளையும் மிகவும் வண்மையாக கண்டிக்கின்றோம் !

இலங்கை தூதரகங்களில் தொடரும் துஸ்பிரயோகங்களையும், புறக்கணிப்புகளையும் மிகவும் வண்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் முதுமானி ரகீப் ஜாபரின் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

rakeeb jawfer
எமது வரிப்பணத்தில் எமக்கு சேவை செய்வதற்காக அமர்த்தப்பட்டவர்கள் , எமது மக்களையே புறக்கணிப்பதை யாராலும் அங்கீகரிக்க முடியாது. முக்கியமாக , எமது நாட்டிற்கு பிரதான அந்நிய செலாவனியை பெற்றுத்தரும் தொழிலாளர் வர்க்கத்தை சிவப்பக் கம்பளம் போட்டு வரவேற்பதை விடுத்து , இவ்வாறு மனம் நோகடிப்பதை ஒரு போதும் எம்மால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சில அதிகாரிகளால் மக்கள் தொடர்ந்தும் சந்திக்கும் அசௌகரிகங்களை அரசாங்கம் தொடர்ந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கின்றது.

 

அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உறவுகளை துறந்து பல தியாகத்திற்கு மத்தியில் வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது மக்களுக்கு ஆறுதலாகவும் பாதுகாவலனாகவும் அடைக்கலமாகவும் செயற்பட வேண்டிய எமது தூதரக அதிகாரிகள், வேலியே பயிரை மேய்வது போல் செயற்படுவது மிகவும் கண்டிக்கத் தக்க விடயமாகும்
பொதுவாக மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தூதரகங்களில் நடைபெறும் அதிகார துஸ்பிரயோகங்கள், லஞ்சம், பாலியல் லஞ்சம், சினேக பூர்வமற்ற மக்கள் சேவை, சொற் துஸ்பிரயோகம், என்பன தொடர்ந்தும் பாரம்பரியமாக நடந்த வண்ணமுள்ளதை மக்கள் தினமும் அவதானிக்கின்றனர்.
இதற்கு அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென்றும் மேலும், தூதரகங்களுக்கு தேவையான மேலதிக வளங்களை அரசாங்கம் வழங்குவதன் மூலம் கால தாமதமில்லாத, மக்கள் சிநேக, சீரான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குகளில் அரசியல் கட்சிகள் எந்த விதத்திலும் தங்கி இல்லை என்றாலும், எமது உறவுகள் அங்கேதான் இன்னும் இருக்கின்றார்கள் எனும் உண்மையை அரசாங்கமும் அனைத்து அரசியல் வாதிகளும் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.