எதிர்வரும் ஆண்டுக்குள் நாட்டில் சேலைன் உற்பத்தி தொழிற்சாலை : சுகாதார அமைச்சர் !

எதிர்வரும் ஆண்டுக்குள் நாட்டில் சேலைன் உற்பத்தி தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

raajitha senaratne
நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான சேலைன் போத்தல்களை உற்பத்தி செய்வது இந்த தொழிற்சாலையின் நோக்கம் என, அவர் மேலும் கூறியுள்ளார். 

நாட்டுக்குத் தேவையான அனைத்து மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்களை உற்பத்தி செய்து இதற்காக வௌிநாட்டுக்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும் என ராஜித்த சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.