24 பேர் கைது….

dv563013காவத்தை கப்பெல ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 24 பேரை  இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர்.

அத்தோடு மாணிக்கக் கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு பெகோ இயந்திரங்களும்  ஒரு ட்ரெக்டர் வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 24 பேரும் காவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் காவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.