தலைக்கவச விவகாரம் – இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிப்பு !

மோட்டார் சைக்கிள் சாரதிகள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தை அணிய பொலிஸார் தடை விதித்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

helmet

அடுத்த வருடம் பெப்ரவரி 11ம் திகதி வரை குறித்த இடைக்கால தடையுத்தரவை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் குறித்த வழக்கு பெப்ரவரி 10ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.