15ம் திகதி நாடுதழுவிய ரீதியில் தனியார் பஸ் ஊழியர்கள் பகிஷ்கரிப்பு !

டிசம்பர் 15ம் திகதி நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Gemunu-Wijeratne
வரவு செலவுத் திட்டத்தில் பஸ் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாக தனியார் பஸ் துறை பெருமளவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். 

விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடில் டிசம்பர் 15ம் திகதி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.