கல்முனை சாஹிராவின் வருடாந்தக் கூட்டமும் , மர்ஹூம் ஜமீல் பற்றிய நினைவுரைகளும் !

அஸ்ரப் ஏ சமத்

கல்முனை சாஹிராக் கல்லுாாியின்  15 வருடகாலமாக  அதிபராக கடமையாற்றிய மறைந்த  எஸ்.எச்.எம் ஜெமீல் அவா்கள் கல்முனை சாஹிராவில்  உருவாக்கிய  கல்விச் சமுகம் இன்று இந்த நாட்டில் மட்டுமல்ல உலகின் நாலா பாகங்களிலும் பரந்து வாழ்ந்துவருகின்றனா். இக்க கல்லுாாியின் பழைய மாணவா்கள் இந்த நாட்டிலும்  சிறந்த  கல்வியலாளாராகவும் , அரச தணியாா் நிறுவனங்களில் உயா் பதவிகள் வகிக்கின்றனா்.  

 மேற்கண்டவாறு வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சின் பணிப்பாளா் நாயகமும் முன்னாள் ஓஸ்ரியா நாட்டின் துாதுவராக கடமையாற்றிய கல்முனையின் சாஹிராவின் பழைய மாணவருமான ஏ.எல். ஏ அசீஸ்  தெரிவித்தாா்.

SAMSUNG CSC

கல்முனை சாஹிராவின் பழைய மாணவா்களது கொழும்புக் கிளையின் வருடாந்த கூட்டமும் கல்லுாாின் முன்னாள் அதிபா் கலாம் சென்ற எஸ்.எச்.எம். ஜெமீல் பற்றிய நினைவுரைகளும் இடம் பெற்றன. இந் நிகழ்வு பழைய மாணவா் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவா் வைத்திய அதிகாரி டொக்டா் சனுஸ் காரியப்பா் தலைமையில் கொழும்பு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு மேற்கண்டவாறு ஜனாப் அசிஸ் தெரவித்தாா். 

இந் நிகழ்வில் மறைந்த கல்விமான் எஸ்.எச்.எம் ஜெமீல் பற்றியும் அவா் கல்முனை சாஹிராவில்  பல்வேறு துறைகளில் அவரது சேவையை வழங்கி மற்றும் கலை, இலக்கியம்,  தமிழ் முஸ்லீம் நாட்டாா்  பண்பாடுகள் , கல்முனை சாஙஹிராவில் 50ஆயிரத்திற்கும் மேறட்டபட்ட மாணவா்களை  வழிப்படுத்தியமை, பண்நுால் ஆசிரியா், தகவல் மற்றும் பல்கலைக்கழக பதிவாளா், சிறந்த நிர்வாகி  போன்ற துறைகளில் ஜெமீல் ஆற்றிய சேவைகளை  நினைவுபடுத்தப்பட்டது.

இச் சொற்பொழிவுகளை – ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பளா் மணிப்புலவா் மருதுாா் ஏ. மஜீத், மேல்மாகணத்தின் சுகாதாரப் பணிப்பாளா் வைத்தியா் ஏ.எல். பரீட், களுத்துறை முஸ்லீம் மகா வித்தியாலய அதிபா் ஏ.ஆர்.எம் ஜிப்றி,  ஆகியோா்கள்  உரையாற்றினாா்கள்.

இக்   கல்லுாாியின் தற்போதைய அதிபா்  பி.எம். மொஹமட் பதுாா்த்தீன் அங்கு உரையாற்றுகையில் 
கல்முனை சாஹிராவுக்கு மூன்று மாடிக் கட்டிடம் புரணரமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் 2 கோடி 50 இலட்சம் ருபா  செலவில் நிர்மாணிக்க இருந்த 3 மாடிக்க கட்டிடம் 49 இலட்சம் ருபா செலவில் புனா்நிர்மாணம் செய்யப்படுகின்றது. 
பிரதியமைச்சா் எச்.எம். ஹரீசினால் ஜனாதிபதித் தோ்தல் காலத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்காக கடந்த வாரம் அம்பாறை கச்சேரியில் உள்ள திட்டமிடப்பணிப்பாளரைச்  சந்தித்து இக்கட்டடித்திற்கான நிதியை டிசம்பா் 31க்கு முன்  பெற சகல நடவடிக்கையும்  எடுக்கப்பட்டுள்ளது. 
SAMSUNG CSC
SAMSUNG CSC
இக்கட்டிடங்கள் கல்முனை சாஹிராவுக்கு நிர்மாணிகப்பட்ட பிறகு அடுத்த 15 ஆண்டுகளுக்கு மாணவா்களுக்கு  இடப்பிரச்சினை இருக்காது என நம்புவதாக அதிபா் தெரிவித்தாா்.
அத்துடன் 2015 உயா்தரம் பெறுபேறு களின்படி  இரண்டு பொறியியலாளா்,  பல்கலைக்கழகம் சென்றனா். 2014 ஆம் ஆண்டில் 7 பொறியியலாளா் 1 வைத்தியரும் பல்கலைக்கழகம் சென்றனா்.  தற்போது விஞ்ஞானதுறையில்  கனணி தொழில்நுட்பம் ஆகியவற்றில்  இம்முறை புதிதாக மாணவா்கள் உயா்தரம் பரீட்சை தோற்றியுள்ளனா்.  2015 அகில இலங்கை ரீதியில் ஆங்கிலம் மொழி மூலம் கிரகித்து எழுதுதல் போட்டியில்  எமது கல்லுாாிக்கு 1ஆம் இடம் கிடைத்துள்ளது. 
SAMSUNG CSC
கிராத் போட்டியில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம் கிடைத்துள்ளது.  2014 ஆம் ஆண்டின் கடின கிறிக்கட் சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் 2ஆம் இடம்.  15 வயதுக்குட்பட்ட மாணவா்களது  சொப்ட் கிறிக்கட் போட்டியில் கொழும்பு ஆணந்தாவை எதிா் கொண்டு 1ஆம் இடத்தை கல்முனை சாஹிரா பெற்றுள்ளது.  தேசிய மட்டத்தில் பொதுஅறிவுத் திறன் போட்டியிலும் 1இடம் பெற்று 
சிறிது காலம் வீழ்ச்சி கண்ட சாஹிரா மீண்டும் எழுச்சி பெறுகின்றது. மறைந்து ஜெமீல் அதிபா்  காட்டிய வழிமுறைகளில் இக் கல்லுாாி மீள எழுச்சி பெற்று முன்னேற்றம். கண்டு வருகின்றது.  பொறியியலாளா்கள் , வைத்தியா்கள் சட்டத்தரணிகளை தேசிய ரீதியில் ஆகக் கூடுதலான முஸ்லீம் மாணவா்களை  பல்கலைக்கழகம் அனுப்பும் ஒரு பாடசாலையாக சாஹிரா  தொடா்ந்து திகழ்ந்துவருகின்றது.  இக் கல்லுாாியில் கல்வி கற்ற பழைய மாணவா்களான  வைத்தியா்கள், பொறியியலளாா்கள். சட்டத்தரணிகள், ஆயிரக்கணக்கில் கொழும்பில் புகழிபெற்று திகழ்ந்து விளங்குகின்றனா். மேலும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று சேவை செய்து வருகின்றனா். என கல்லுாாி அதிபா் பதுா்த்தீன் அங்கு உரையாற்றினாா்.
SAMSUNG CSC
அடுத்த மாதமளவில் இலங்கையில் உள்ள 7 சாஹிராக் கல்லுாாிகளும் ஒன்றினைந்து ஒரு   போரத்தை உருவாக்கி நட்புரவு ரீதியில் கல்வி, மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியில் ஒன்று கூட உள்ளதாகவும் கல்லுாாி அதிபா் அங்கு தெரிவித்தாா்.