பிரச்சினைக்கு தீர்வு பணிப் பகிஷ்கரிப்பு அல்ல, பேச்சுவார்த்தையே : ராஜித்த !

அரச வைத்திய அதிகாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு பணிப் பகிஷ்கரிப்பு அல்ல, பேச்சுவார்த்தையே என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

rajitha 

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையுடனான வாகன அனுமதிப்பத்திர முறை இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் அடிப்படைச் சம்பளத்தில் 10,000 ரூபாவை அதிகரிக்கின்றமை போன்ற பிரச்சினைகள் குறித்து தன்னுடன் வைத்திய அதிகாரிகள் சங்கம் எந்தவொரு அறிவிப்பையோ கலந்துரையாடலையோ மேற்கொள்ளவில்லை என, அதில் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் அரச வைத்திய அதிகாரிகளின் பிரச்சினைகள் குறித்து தாம் அதிகமாக தெரிந்து கொண்டது ஊடகங்கள் மூலமே எனவும் ராஜித்த சேனராத்ன இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.