மூவின மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கவும் மக்கள் விடுதலை முன்னணியால் மட்டுமே முடியும் – அனுர குமார !

maxresdefault

நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்­லவும் தொழி­லாளர் சமூ­கத்தை பாது­காக்கும் அர­சியல் பாதை­யினை அமைக்­கவும் நாம் தயார். பிர­தான இரு கட்­சி­க­ளை யும் நம்பி இனியும் மக்கள் ஏமாற வேண்டாம் என மக்கள் விடுதலை முன்­னணி அதன் மே தினக் கூட்டத்தில் தெரி­வித்­தது.

முழு சமூ­கத்­துக்­கு­மான ஜன­நா­யக

சம­வு­டமை ஆட்­சிக்­கான சிந்­தனை எம்­மிடம் உள்­ளது. அதை செயற்­ப­டுத்த சரி­யா­ன­தொரு சந்­தர்ப்­பத்­தினை மக்கள் எமக்கு வழங்க வேண்டும் எனவும் அக் கட்சி தெரி­வித்­தது.

இதில் உரை­யாற்­றிய மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுரா குமார திசா­நா­யக குறிப்­பி­டு­கையில்,

உலக தொழி­லாளர் தினத்தில் தொழி­லா­ளர்­களை ஒன்­று­ப­டுத்தும், அவர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்கும் தொழி­லாளர் தினம் தான் நடத்­தப்­பட வேண்டும் ஆனால் இன்று பிர­தான கட்­சி­க­ளினால் நடத்­தப்­படும் மே தினக் கூட்­டங்கள் அர­சியல் கூட்­டங்­க­ளாக மாறி­விட்­டது. கடந்த மே தினம் மஹிந்­தவின் மே தின­மாக அமைந்­தது. இம்­முறை மே தினக் கூட்டம் ரணிலின் கூட்­ட­மாக மாறி­யுள்­ளது. கடந்த மேதினக் கூட்டம் நீல நிற­மாக நடந்­தது அனால் இம்­முறை பச்சை நிற­மாக மாறி­யுள்­ளது.

கடந்த முறையும் சாராயம், சாப்­பாடு என்­பன கொடுக்­கப்­பட்டு மேதினக் கூட்­டத்தை மஹிந்த நடத்­தினார், இம்­மு­றையும் அதே செயலை ரணில் செய்­துள்ளார் ஆகவே இன்று ரணில் தலை­மையில் நடப்­பது அர­சியல் கூட்­டமே தவிர மே தினக் கூட்டம் அல்ல. அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெறும் மே தினக் கூட்­டமும் அதி­கா­ர­தயை தக்­க­வைக்கும் செய­லா­கவே அமைந்­துள்­ளது. ஒரு புறம் மஹிந்­தவின் ஆத­ரவுக் குழு­வினர் அணி திரள மறு­புறம் மைத்­திரி ஆத­ரவு அணி திரண்­டுள்­ளது. ஆனால் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மே தினக் கூட்டம் உண்­மை­யான தொழி­லா­ளர்­களின் உரி­மைக்­கான மே தின­மாக நடை­பெற்­றுள்­ளது.

நாட்டில் வர்க்க பாகு­பாடு இன்றி, மொழி பேத­மின்றி வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து பகு­தி­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து உழைப்­பாளர் வர்க்­கத்­தி­னரும் இன்று எம்­முடன் கை கோர்த்­துள்­ளனர். அதேபோல் இத்­தனை காலமும் நாட்டு மக்­களின் வறு­மை­யையும். மஹிந்த அர­சாங்­கத்தின் அரா­ஜக ஆட்­சி­யி­னையும் கட்­டுப்­ப­டுத்த மக்­களை ஒன்­றி­ணைத்தோம் ஆனால் இன்று அந்த போராட்­டத்தில் வெற்­றி­கண்­டுள்ளோம். ஆயினும் நாம் எதிர்­பார்த்த முழு­மை­யான தொழி­லா­ளர்­க­ளுக்­கான வெற்றி இன்­னமும் கிடைக்­க­வில்லை. நாட்­டிற்கு தேவை­யான அர­சாங்கம் இன்­னமும் அமை­ய­வில்லை. முத­லா­ளித்­துவ ஏகா­தி­பத்­திய அர­சாங்­கத்­தினால் இத்­தனை காலமும் தொழி­லாளர் வர்க்கம் சுரண்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. தொழி­லாளர் வர்க்­கத்தின் உழைப்பும் உரி­மை­களும் இந்த முத­லா­ளித்­துவ சமூ­கத்­தினால் பறிக்கப் படு­கின்­றது.

மேலும் குற்­ற­வா­ளி­க­ளையும், சுரண்டல் காரர்­க­ளையும் பாது­காத்து குற்­றங்­களை மறைக்கும் வேலை­யினை இந்த அர­சாங்­கமும் செய்து வரு­கின்­றது. கடந்த அர­சாங்­கத்தில் மஹிந்த குடும்­பத்­தினால் செய்த மோச­டி­களால் அனை­தில்லும் பாதிக்­கப்­பட்­டது நாட்டு மக்­களே. அவ்­வா­றான குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­காது பாது­காப்­பது ஏன். இந்த ஆட்­சி­யையும் மக்­களை ஏமாற்றும் ஆட்­சி­யா­கவே மாறி­வ­ரு­கின்­றது .

ஆட்சி மாறி­னாலும் மக்­களின் வறுமை, கல்­வி­யின்மை, போசாக்­கின்மை எவையும் குறை­ய­வில்லை. மக்கள் எதை விரும்­பு­கின்­ற­னரோ அதற்­கேற்ப ஆட்சி செய்­வதே தலை­வர்­களின் பண்­பாக இருக்க வேண்டும். ஆனால் இன்றும் ஆட்­சியை தக்க வைக்கும் சுய­நல அர­சி­யலில் அப்­பாவி மக்கள் சிக்கி தவிக்­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பும் பல கால­மாக நாட்டில் ஆட்சி செய்­துள்­ளனர். இன்று இரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஆட்சி செய்­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகிய இரு கட்­சி­களும் பார்­வையில் ஒரே மாதிரி இருந்­தாலும் இவ் இரு கட்­சி­களும் நாட்டில் ஆட்சி செய்ய தகு­தி­யில்லாக் கட்­சி­களே.

இவர்கள் தனித்து ஆட்சி நடத்­தி­னாலும் சரி அல்­லது ஒன்­றி­ணைந்து ஆட்சி நடந்­தி­னாலும் சரி இந்த நாட்டு மக்­க­ளுக்­கான ஜன­நா­யக ஆட்சி ஒரு போதும் உரு­வாகப் போவ­தில்லை. ஒரு வர்க்­கத்தின் நலன்­களை மட்­டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்­து­கின்­றனர். ஆனால் முழு சமூ­கத்­துக்­கு­மான ஜன­நா­யக ஆட்சி எம் சிந்­த­னையில் உள்­ளது. அதை செயற்­ப­டுத்த சரி­யா­ன­தொரு சந்­தர்ப்­பத்­தினை மக்கள் எமக்கு வழங்க வேண்டும். இனியும் இவர்­களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். எமது பொரு­ளா­தாரக் கொள்­கை­களும், கல்வி முறை­மையும், சமூகக் கட்­ட­மைப்பும் சர்­வ­தேச தன்­மை­க­ளுடன் பொருந்தும் வகையில் தான் அமைந்­துள்­ளது. நாம் ஆட்­சியை கையில் எடுத்தால் எந்த நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்வோம். இதில் தொழி­லாளர் சமூ­கத்தின் பாது­காப்பு பல­ம­டையும்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுக் செய­லாளர் ரில்வின் சில்வா உரை­யாற்­று­கையில்,

நாம் நடத்­து­வது அர­சியல் கூட்­ட­மல்ல இன்­றைய தினம் அர­சியல் சாயம் பூசப்­ப­டாத ஒரு தினம் இந்த தினத்தில் உழைக்கும் வர்க்­கத்தின் நலன்­க­ளிலும் அவர்­களன் உரி­மை­க­ளி­லுமே அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­க­வேண்டும். எமது பேர­ணியும் அதைப்­போல்­லொன்றே. நாம் இன்­றைய கூட்­டத்­தி­னையும் பேர­ணி­யையும் நடத்­து­வது உழைக்கும் வர்க்­கத்தின் நாளை­களை பாது­காக்­கவே. எமது பயணம் அர­சி­ய­லுக்கும் அப்­பா­லான பொது­வு­டைமை சார்ந்­தது. இதில் முத­லா­ளித்­துவ வர்க்­கத்தின் பிடியில் இருந்து தொழி­லா­ளர்­களை பாதுக்­காப்­பதே எமது பிர­தா­ன­மான இலக்­காகும்.

வெற்றி எப்­போதும் ஏகா­தி­பத்­திய முத­லா­ளித்­துவ சமூ­கத்தை சார்ந்தே இருக்கப் போவ­தில்லை. தொழி­லாளர் வர்க்­கத்­தி­டமே நிரந்­த­ர­மான வெற்றி தங்­கி­யுள்­ளது . நவீன சமூ­கத்­திலும் தொழி­லாளர் வர்க்­கத்தை சார்ந்தே உலகம் இயங்­கு­கின்­றது அதை மேலும் தெளிவு படுத்­தவும் உறு­திப்­ப­டுத்­த­வுமே எமது இந்த மே தினக் கூட்­டத்­தினை மக்கள் வெள்­ளத்தில் மூழ்­க­டித்­துள்ளோம் . எனவே இன்று நடை­பெறும் மே தினக் கூட்­டங்­களில் தொழி­லா­ள­ருக்­கான உண்­மை­யான மே தினத்­தினை அனுஷ்­டிப்­பது மக்கள் விடு­தலை முன்­னணி மட்­டுமே. அதேபோல் அனைத்து தொழி­லாளி வர்க்­கத்­தி­னரும் எப்­போதும் எம் பக்­கமே உள்­ளனர்.

இன்று அர­சியல் நாட­க­மொன்று இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. இதில் பிர­தான இரு கட்­சி­களும் வேஷம் போட்­டு­கொண்­டி­ருக்­கின்­றனர் . இதை மக்கள் நம்பிய காலம் போதும் இனிமேல் உண்மையான ஆட்சிக்கும், உண்மையான ஜனநாயகத்துக்குமானதொரு ஆட்சியை அமைக்க வேண்டும் . இதில் ஜே.வி .பி யின் பங்கு மிக அதிகமாகவே உள்ளது. நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்ல மக்கள் முன்வரவேண்டும். நாட்டை மோசடிகளில் இருந்து பாதுகாக்கவும், ஜனநாயகத்தை உருவாக்கவும் மூவின மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கவும் மக்கள் விடுதலை முன்னணியால் மட்டுமே முடியும். எனவே எதிர்வரும் காலங்களில் மக்கள் தமது தெரிவினை சரியாக பயன்படுத்தி நாட்டை பாதுகாக்கவும் மக்களை பாதுகாக்கவும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.