விடை பெறுகிறார் ….

Shahid-Afridi-record

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதி­ரடி சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான அப்­ரிடி 2010ஆம் ஆண்டு டெஸ்­டிலும், இரு மாதங்­க­ளுக்கு முன்பு ஒரு நாள் போட்­டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இப்­போது 20 ஓவர் அணிக்கு தலை­வ­ராக இருந்து இரு­பது ஓவர் கிரிக்­கெட்டில் மட்டும் விளை­யாடி வரு­கிறார். இந்த நிலையில் அப்­ரிடி அடுத்த ஆண்­டுடன் 20 ஓவர் கிரிக்­கெட்­டுக்கும் முழுக்கு போட முடிவு செய்­துள்ளார்.

இது தொடர்­பாக அப்ரிடி கூறு­கையில், அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டி­யுடன் 20 ஓவர் போட்­டியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டு விடுவேன். இத்­துடன் எனது சர்­வ­தேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெற்று விடும். ஆனாலும் இங்­கி­லாந்தில் கழகப் போட்­டி­யிலும் இன்னும் சில 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்­டி­க­ளிலும் தொடர்ந்து விளை­யா­டுவேன். எனது கிரிக்கெட் வாழ்க்­கையை மறக்க முடி­யாத நினை­வு­க­ளுடன் முடிக்க விரும்­பு­கிறேன் என்றார்.

6ஆவது 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி இந்­தி­யாவில் அடுத்த ஆண்டு (2016) மார்ச்–­ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.