நாடாளுமன்றை கலைக்க விடமாட்டோம் – எதிர்க் கட்சித் தலைவர் !

NimalSiripala_360px_12_01_24-300x191

அர­சியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­வுடன் ஜன­நா­யகம் வென்­றெ­டுக்­கப்­பட்­ட­தாக கூறு­வது தவ­றா­னது. சுயா­தீன செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடமை என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார்.

19ஐ கார­ணம்­காட்டி பொதுத் தேர்­த­லுக்கு செல்ல ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிக்­கின்­றது . 20ஆவது திருத்தச் சட்டம் நிறை­வே­றாது பாரா­ளு­மன்­றத்தை கலைக்க விட­மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 19ஆவது திருத்தச் சட்டம் வர­வேற்­கத்­தக்க விட­யமே . அதி­காரப் பகிர்வு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பது நாட்டின் அர­சியல் கலா­சா­ரத்தை மீண்டும் பாது­காத்­துள்ள வகை­யிலே அமைந்­துள்­ளது. எனினும் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வே­றி­ய­வுடன் அதை­மட்­டுமே கவ­னத்தில் கொண்டு செயற்­ப­டாது அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும் . ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்­களை குறைப்­ப­தனால் மட்­டுமே நாட்டில் ஜன­நா­யகம் ஏற்­படப் போவ­தில்லை.

சுயா­தீன சேவைகள் மற்றும் தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வதன் மூலமே முழு­மை­யான வெற்­றி­யாக மாற்­றி­ய­மைக்க முடியும். ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியும் அவர்­களின் ஆத­ரவுக் கட்­சி­களும் 19ஆவது திருத்­தத்தை மட்டும் நிறை­வேற்றி அத­னூ­டாக சுய­நல அர­சி­யலை செய்ய முயற்­சிக்­கின்­றனர். அதற்கு நாம் ஒரு­போதும் இடம் கொடுக்க மாட்டோம்.

ஐக்­கிய தேசியக் கட்சி நினைப்­பதைப் போல் இப்­போது பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­த­லுக்கு செல்லும் முயற்­சியை நாம் விரும்­ப­வில்லை. 19ஆவது திருத்தச் சட்டம் எவ்­வாறு நிறை­வேற்­றப்­பட்­டதோ அதேபோல் தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தும் 20ஆவது திருத்தச் சட்­டமும் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட வேண்டும். அது வரையில் நாம் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க அனு­ம­திக்க மாட்டோம்.

ஆரம்­பத்தில் நாம் 19ஆவது திரு­த்த சட்டமூலத்­தினைப் போல் 20ஆவது திருத்தச் சட்­டமூலத்­தி­னையும் ஒன்­றாக கொண்­டு­வர வேண்டும் என்ற கோரிக்­கை­க­்கமை­யவே செயற்­பட்டோம். ஆனால் ஜனா­தி­ப­தியின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­யவும் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் அவ­சி­யத்­திற்கு அமை­யவே நாம் 19 ஆவது திருத்தச் சட்­டத்தை ஆத­ரித்தோம். ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறை­வேற்­றப்­படு­மென ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எமக்கு வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளனர். அதற்­க­மைய கட்­டாயம் 20 ஆவது திருத்தச் சட்­டமூலத்தை நிறை­வேற்­றி­யாக வேண்டும்.

மேலும் சுயா­தீன செயற்­பா­டுகள் தொடர்­பிலும் எமக்கு சந்­தேகம் எழுந்­துள்­ளது. ஏனெனில் ஊடக அடக்­கு­மு­றைகள் தொடர்பில் 19 ஆவது திருத்­தச்­ சட்­ட மூலத்தில் சரத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டதைப் போல ஏனைய சுயா­தீன சேவை­க­ளிலும் சிக்­கல்­களை ஏற்படுத்தவும் இவர்கள் முயற்சிக்கலாம். அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை அரசாங்கமாக நாம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் வேலையை நாம் செய்தாக வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.