விரைவில் …..

Sri-Lanka-Election

 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­திப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திகதி ஒதுக்­கி­யுள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்­துள்ளார்.

கொழும்பு ஹைட்பார்க் மைதா­ன­த்தில் நேற்று நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மேதினக் கூட்­டத்தில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

முரண்­பா­டு­களை களைந்­து­கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யுள்­ளனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­திப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திகதி ஒதுக்­கி­யுள்ளார்.

நாங்கள் ஐக்­கிய தேசிய கட்­சியின் அடி­மைகள் அல்ல. அடுத்த மே தினக் கூட்­டத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் நடத்துவோம் என்றார்.