இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகிறார் !

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று ஞாயிறு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கு வருகை தரும் அவர் பழைய போர் விமானங்கள், விமான எதிர்ப்பு பீரங் கிகள், யுத்த டாங்கிகளை தரமுயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடுவார் எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் சீனாவின் செல்வாக்கினைத் தடுக்கும் ஒரு இராஜதந்திர செயற்பாடாகவே இவரது விஜயம் அமையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இவர் இலங்கையில் பல முக்கிய சந்திப் புக்களையும் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

profile-dalbir-singh-aug18_650_080814024607