மக்களின் எதிர்பார்ப்பு, தேவைப்பாடு என்பவற்றை நிறைவேற்றவே நாங்கள் பதவிக்கு வந்தோம் : பிரதமர் !

அதிகாரத்தை பெற்றுக் கொள்வது சுலபம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் போது பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு, தேவைப்பாடு என்பவற்றை நிறைவேற்றவே நாங்கள் பதவிக்கு வந்தோம். ஆனால் எங்களை வீழ்த்துவதிலேயே சிலர் குறியாக இருக்கிறார்கள். அவர்களது எண்ணங்களை முறியடித்து மக்கள் சேவைக்காக நாம் எம்மை அர்ப்பணித்துச் செயலாற்றி வருகின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Ranil-18

எங்களது செயற்பாடுகளை முன் எடுக்கிறோமா இல்லையா என்பது தொடர்பில் எங்களுக்கு தற்போது சவாலாகவுள்ளது. அதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.