விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பாவிப்பதனை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடை பவணி!

 

ஹாசிப் யாஸீன்

 

விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பாவிப்பதனை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடை பவணி இன்றுசனிக்கிழமை (21) காலை 6.30 மணியளவில் கொழும்பில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நடை பவணி மஹிந்த ராஜபக்ஷநெலும்பொக்குன சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு சுதந்திர சதுக்கம் வரை சென்று நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூனா ரனதுங்க, இலங்கைகிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரிய, இலங்கைகிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்ஜலோ மத்தியூஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், விளையாட்டுஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1_Fotor_Collage_Fotor