நீரிழிவு நோய் – மட்டு நகரில் பேரணி !

ஜவ்பர்கான்

 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சலரோக தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் திருமதி. தர்சினி கருப்பபைய்யா மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுனர் டொக்டர் கே.கருணாகரன் மற்றும் வைத்திய விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் தாதியர்கள் கலந்துகொண்டனர்.

S2890127_Fotor
இதன்போது, நீரிழிவு நோய் தொடர்பாகவும் அதன் பக்க விளைவுகள் தொடர்பாகவும் விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது.

S2890119_Fotor

S2890122_Fotor