இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய தீர்மானம் !

 

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய தீர்மானிக்கப்ட்டுள்ளது.

images

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 126 இந்திய மீனவர்கள் நாளை (09) விடுதலை செய்யப்படுவார்கள் என கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மீனவர்களை விடுதலை செய்வதற்கான சட்ட மா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் ஆகிய பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 126 பேரையும் குறித்த பகுதியிலுள்ள நீதிமன்றங்களில் நாளை (09) ஆஜர்படுத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கட்றொழில் நீரியல்வள அமைச்சர் கூறுகின்றார்.

எனினும் இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் என்பன விடுவிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.