மாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் தெஹிவளையில் கைது !

மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் பயணித்த படகை வெடிக்க வைத்து அவரை கொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை தெஹிவளை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மாலைதீவு துனை ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.