ஒலுவிலைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அதிபர் எம்.எல்.எம்.இஸ்மாயில் காலமானார்!

எஸ்.எம்.அறூஸ்
 அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகாத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 
ஒலுவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.எல்.எம். இஸ்மாயில் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவரது சடலம் பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
ஒலுவில் பிரதேசத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் ஆசிரியராகவும்,அதிபராகவும் திகழ்ந்தவர் ஓய்வு பெற்ற அதிபர்  மர்ஹூம் எம்.எல்.எம்.இஸ்மாயிலாகும். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும்  இவரின் உடன்பிறப்புக்களாகும்.இவரது திடீர் மறைவு ஒலுவில் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.