தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வட புல முஸ்லிம்களின் இருப்பை சிதைத்து விடாதீர்கள் – அஸ்மி ஏ கபூர்

இன பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் வட புல முஸ்லிங்களது மீள் குடியேற்றம், முஸ்லீம் சமுகத்தின் இழப்பீடு தொடர்பான ஆவணப்படுத்துகை தொடர்பில் அக்கரைப்பற்று அஷா ஹோட்டலில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஸ்மி ஏ கபூர் மேற் குறிப்பிட்டவாறு தெரிவித்தார்
DSC06295-2_Fotor
இதில் முன்னாள் அக்கரைப்பற்று பிரதேச சபையினுடைய தவிசாளர் எம். ஏ.றாசிக்கும் கலந்து கொண்டார்.
மேலும் கருத்து வெளியிடுகையில்
வட புல முஸ்லீம்களின் இன்னல்கள் நிறைந்த அகதி வாழ்வுக்கு கால் நூற்றாண்டு நிறைவடைந்த பின் மீண்டும் தூசி தட்டி மேலடுக்ப்பட்டிருக்கிறது
அவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் காத்திரமான முன்னெடுப்புகளை முன் கொண்டு செல்ல வேண்டும்
அதற்க்கான அவசரமானதும் தீர்க்கமான நகர்வுகளை மேற் கொள்ள வேண்டும்
வெறுமனே தமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக சமுகத்தை பிழையாக வழி நடத்த வேண்டாம்
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம்களது இழப்புகள் முன்னிலை படுத்தப்பட்டு உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும்
அதன் பின்னர் எம்மை மூன்றாந்தரப்பாக ஏற்றுக் கொள்ளதக்க பொறிமுறைகளினுடாக வடக்கு கிழக்கு மாகாண முஸ்லீம்களின் உயிரிழப்பு செத்திழப்பு நிலங்களை இழந்த மக்களுக்கான நிவாரணங்கள் என்பன உரிய முறையில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்
ஏற்கனவே இழப்பீட்டு ஆய்வு மையத்தினால் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சமர்பிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்
1.புட்டம்பை மக்களின்  அசையாத சொத்துக்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்
2.துப்பாக்கி முனையில் கிரயமாக பெற்றுக் கொண்ட காணிகளை முஸ்லீகளிடம் ஒப்படைக்க வேண்டும்
3.நீதிமன்ற கட்டளையை மீறி மேய்ச்சல் தரையை உருவாக்கிவர்களை வன்முறை யாளர்கள் என பிரகடனப்படுத்த வேண்டும்
4.உத்தியோகம் என்ற அடிப்படையில் நாட்டை விட்டு சென்றவர்களும் பணயக்கைதிகளுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி சேவையில் இணைத்து கொள்ள வேண்டும்
5 தமது உயிர்களை வயல்களிலும் எனைய இடங்களிலும் இழந்தவர்களுக்கு அவர்களது குடும்ப நிலைக்கேற்ப நிவாரணம் வழங்கப்படவேண்டும்
மேலும் காத்திரமான தீர்வை நோக்கிய
நகர்வுகளுக்காக முதற்கட்டமாக வட புல மக்களின் மீள் குடியேற்ற த்தை அவசரமாக ஒண்றினைந்து செயற்படுத்தியே ஆக வேண்டும் என்றார்.