பள்ளிவாயல் மற்றும் கலாசார மண்டப நிர்மான பணிக்கு 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு!

 

அபு அலா 

 

அம்பாறை, அட்டாளைச்சேனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் முயற்சியினால் அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலுக்கும், மஸ்ஜிதுல் பலாஹ் கலாச்சார மண்டப நிர்மான பணிக்குமாக ரூபா 20 இலட்சம் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பள்ளிவாயல் நிருவாகத்தின் தலைவர்  எ.எல்.தஸ்லிம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார்.

 

இந்நிதியின் மூலம் பள்ளிவாயலின் திருத்த வேலைகளும், கலாச்சார மண்டபத்தின் வேலைகளும் தற்போது இடம்பெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

 

இதனை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம.நஸீர் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை திடீர் விஜயத்தினை மேற்கொண்டு அங்கு நடைபெறும் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதுடன் குறித்த வேலைகளை உடனடியாக செய்து முடிக்கவும் அங்கு பணிப்புரை வழங்கினார்.

 

இந்த வேலைகளை குறிப்பிட்ட சில வாரங்களுக்குள் செய்துமுடிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் குறித்த பணம் திரும்பிச்செல்லும் நிலைமை ஏற்படும் எனவும் இந்த வேலைகளை மிக விரைவில் செய்து முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தீவரப் படுத்துமாறும் பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.தஸ்லிம் உள்ளிட்ட நிருவாகத்தினரிடம் வேண்டிக்கொண்டார்.