பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் தொடர்ந்தும் விளக்கமறியலில் !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் கஹவத்தை பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

Premalal-Jayasekara-415x260
இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, இது தொடர்பான விசாரணைகள் நிறைவுக்கு வரவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர்.

இதன்படி சந்தேகநபர்களை தொடர்ந்தும், நவம்பர் 3ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, பெல்மடுல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்