அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் 9 மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு !

அபு அலா 

கடந்த 2014 ஆம் ஆண்டு க.பொ. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியானது. இதில் அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் 9 மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.றஸ்மி இன்று (16) தெரிவித்தார்.

2_Fotor

இதில் ஜெ.றிஸ்னா – 3ஏ பெற்று முகாமைத்துவ தகவல் தொழிநுட்ப கற்கை நெறிக்காகவும், எம்.எச்.பாத்திமா சஹாறா – 3பி, ஏ.பாத்திமா றனா – ஏ, 2பி, எம்.எச்.பாத்திமா சுஹா – ஏ, 2பி ஆகிய மாணவிகள் இஸ்லாமிய கற்கை நெறிக்காகவும்,  எஸ்.பாத்திமா சுமைஹா – 2ஏ, பி, எம்.எப்.பாத்திமா பஸ்னா 2ஏ, பி, எம்.சீ.பாத்திமா ஆயிஸா – ஏ, 2பி, ஜெ.றிஸ்மிலா – ஏ, 2பி, எச்.பாத்திமா றுஸ்னி – ஏ, பி, சி ஆகிய மாணவிகள் கலைப் பிரிவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.றஸ்மி மேலும் தெரிவித்தார்.