பொத்துவில் மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை : SSP மஜீத் !

எம்.ஏ. தாஜகான்

பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் பலவருடங்களாக பாடு கரைவலையில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் தங்களது தொழில்களை செய்வதற்குரிய அனுமதியினையும்,தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கரைவலை தொடர்பான பிரச்ிசனையும் தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொத்துவிலின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.எம்.அப்துல் மஜித் அவர்கள் இன்று தெரிவித்தார். 

DSCN1514_Fotor

பொத்துவில் கரைவலை மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் பொழுது ஏற்படும் இன்னல்கள் நிவர்த்தி செய்தல் பற்றி  கருத்து தெரிவிக்கின்ற பொழுதே எம்.அப்துல் மஜித் தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட விடயம் குறித்து பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர்அலிக்கு உடன்தெரிவித்து மீன்பிடி அமைச்சருக்கு இது பற்றிய அறிக்கையினை சமர்ப்பித்ததாகவும், மீன்பிடி அமைச்சரோடு பேசி மீனவர்களுக்கான நிரந்த தீர்வினை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் மஜித் தெரிவித்தார்.