குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அழைப்பு !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக பிள்ளையான் என அழைக்கப்படும், சிவனேசதுறை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 
images
முன்னதாக இருமுறை அவரது இல்லத்திற்கு விசாரணைகளுக்காக சென்ற போதும் அவர் அங்கு இல்லாததால் இன்று மாலை அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியக்கிடைத்துள்ளது .