தேசிய செய்திப் பத்திரிகை விநியோகம் செய்யும் முகாமையாளர்களின் 9 வது அண்டு நிறைவு ஒன்று கூடல்!

அபு அலா 

 

அகில இலங்கை ரீதியாக தேசிய செய்திப் பத்திரிகை விநியோகம் செய்யும் முகாமையாளர்களின் 9 வது அண்டு நிறைவு ஒன்று கூடல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (13) கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.

 

நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சிறிமல் பீரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற குழுக்களின் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் வெகுஜன ஊடக, பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

 

இந்நிகழ்வில் பிரபல மேடை நாட்டிய தாரகைகளின் நடன நிகழ்வும், முகவர்களுக்கான கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இதில் குலுக்கல் சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்படும் செய்தி முகவர்களுக்கு பெறுமதிமிக்க பரிவுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.