அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஒன்று கூடல் நிகழ்வு !

image1பைஷல் இஸ்மாயில் 

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) 10.00 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ரீ.கே.றஹ்மத்துல்லா தெரிவித்தார்.

1

சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த ஒன்று கூடல் நிகழ்வின்போது, ஊடகவியலாளர்களின் கடந்தகால நிகழ்வுகள் பற்றியும், அவர்களிடத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் ஆராயப்படவுள்ளன எனவும் இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும், சம்மேளனத்தின் கூட்டறிக்கை, பொருளாளர் அறிக்கையுடன் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீனின் பிரதானமான உரையும் இடம்பெறவுள்ளதாகவும் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ரீ.கே.றஹ்மத்துல்லா மேலும் தெரிவித்தார்.