நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும் !

mano

நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் பிற பகுதிகளில் ஆறாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

மலையக தமிழருக்கு கடந்த 28 வருடங்களாக ஜனநாயக மறுப்பு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இதனை கருத முடியும். 
இது தனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சகவாழ்வு விடயத்துக்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த மிக நீண்ட கால அநீதி இப்போதாவது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.