தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 13பேர் விளக்கமறியலில் !

 

570607-CourtJudgeJustice-1372617557-583-640x480

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 13 பேரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பல்கலைக்கழக மாணவர்களின் விடுதியில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த போராட்டம் இடம்பெற்றபோது பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தத குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 13 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

பல்கலைக்கழக கட்டிங்களின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து 13 மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர். 

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 20ம் திகதி வரையில் மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..