இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு !

இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சிலவற்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்மரசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் இரண்டாம் நாளில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாமியோ கிஷிடாவை சந்தித்தார்.

 

இலங்கைக்கு உதவி புரிய தயாராக இருப்பதாக வெளவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

 

அதன் பின்னர் பிரதமர் டோக்கியோ நகரில் இடம்பெற்ற இடம்பெற்ற ஜப்பான் – இலங்கை வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.

 

புதிய அரசாங்கத்தின் கீழ் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுப்படுத்துவரும் இலங்கைகு தேவையான பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு தயார் எனவும், ஜப்பான் – இலங்கை வர்த்தக மாநாட்டின் தலைவர் ததயுக்கி ஷிசிக்கி தெரிவித்தார்.

 

இலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புக்கு ஏற்றவகையில் அரசியல் பொருளாதாரத்தினை மறுசீரமைப்பதற்கு புதிய அரசு தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாநாட்டில் தெரிவித்தார்.

 

இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.