5 கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரொய்னுடன் நால்வர் கைது !

கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் 5 கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரொய்னுடன் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்களிடம் சுங்க அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணை நிறைவுபெற்றுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும். சுங்க ஏற்றுமதி பிரிவுப் பணிப்பாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

 

சட்டவிரோதமாக ஐந்து கிலோகிராம் ஹெரொய்னை நாட்டிற்கு கொண்டுவந்த நான்கு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

நான்கு சந்தேகநபர்களும் கிருலப்பனை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.