யார் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள விடயம் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்றது !

இலங்கை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள விடயம் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது – சங்கக்கார

துரதிர்ஷ்டவசமாக இலங்கை தற்போது போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள விடயம் சர்வதேச மட்டத்தில் பேசப்படுவதாக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்தார்.

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.