பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகமும் சேருநுவர பொலிஸ் நிலையமும் இணைந்து போக்குவரத்து விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு !

 

ஏ.எஸ்.எம்.தாணீஸ்

 

பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகமும் சேருநுவர பொலிஸ் நிலையமும் இணைந்து பாதூப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து விபத்துகள் தொடர்பான விழிப்புனர்வு செயலமர்வொன்றினை [30] நடாத்தியது.

DSC04750_Fotor_Collage_Fotor

பாதுகாப்புமிகு தெருவீதிக்கான நன்மைமிகு நாளையை உருவாக்குவோம் எனும் தொனியில் மஹாவலிகம மஹா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு செயற்பாடு சேருநுவர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பரசோதகர் சந்தன பிரசாத் ஜயதிலக்க தலைமையில் நடைபெற்றது.

 

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 08 சிங்கள,தமிழ் மொழி மூலப் பாடசாலைகளிலிருந்து சுமார் 600க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வளவாளராக பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகத்தின் உதவி பரிசோதகர் சுரஞ்சித் பெரேரா கல்து விரிவுரை நிகழ்த்தினார்.அதேவேளை வீதி போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்கள் அதன் விளைவுகள் தொடர்பாக செயற்பாட்டு விளக்கமும் சேருநுவர நகரப்பகுதியில் நடைபெற்றது.

_Fotor_Collage_Fotor