முச்சக்கர வண்டி — மோட்டார் சைக்கிள் மோதல் !

ஜவ்பர்கான்
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னாள் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

S2680016_Fotor

இச்சம்பவம் இன்று நண்பகல் 11.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் இச்சம்பவம் இ;டம் பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த முச்சக்கர வண்டி அதே திசையால் வந்த மோட்டார் சைக்கிள் எரிபொருள் நிரப்புவதற்காக மாறியபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாத முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

S2680017_Fotor

ஸ்தலத்திற்கு விரைந்த மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முச்சக்கரடிவண்டி சாரதியை கைது செய்தனர்.
காத்தான்குடி பொலிஸசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

S2680020_Fotor