உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாசிக்குடா கடற்கரை துப்பரவு செய்யப்பட்டது !

அசாஹீம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் பாசிக்குடா கடற்கரையை துப்பரவு செய்யும் நிகழ்வு (27.09.2015) காலை இடம் பெற்றது.

02_Fotor

இலங்கை சுற்றுலா அதிகார சபை கிழக்கு மாகாண கரையோர ஹோட்டல்கள் ஒன்றியத்தின் அமைப்பும் இணைந்து பாசிக்குடா கடற்கரையை துப்பரவு செய்யும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

7_Fotor

 

இலங்கை சுற்றுலா அதிகார சபையின் பாசிக்குடாவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.மாஹிர்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கரையோர ஹோட்டல்கள் ஒன்றியத்தின் தலைவர் ஆனந்த விக்ரமசிங்ஹ, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக நவரத்ன  ஹோட்ல்கள்pல் கடைமாற்றும் ஊழியர்கள், கோறளைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் பாசிக்குடா வியாரிகள், படகோட்டிகள் என பலரும் இச் சுத்திகரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

10_Fotor 15_Fotor