பலஸ்தீன் நாட்டுக்கான தூதுவரை கௌரவிக்கும் நிகழ்வு !

ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பலஸ்தீன் நாட்டுக்கான தூதுவராக நியமிக்கப்படட்டவரும் கொழும்-12 அவ்வல் ஸாவியாவின் சமய விவகாரங்களுக்கான தலைவரும் நிருவாக சபை உறுப்பினருமான பௌஸான் அன்வரை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை கொழும்-12 அவ்வல் ஸாவியாவின் நிருவாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

IMG_8407_Fotor
அவ்வல் ஸாவியாவின் தலைவர் தேசமான்ய மக்கி ஹாசிம் தலைமையில் இன்று (27) இடம் பெற்றபோது அவ்வல் ஸாவியாவின் நிருவாக சபை உறுப்பினர்கள், ஸாவியாக்கள், தரிக்காக்களின் பிரதிநிதிகள், மௌலவிமார்கள், உலமாக்கள், புத்தி ஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_8413_Fotor

இதன்போது பௌஸான் அன்வருக்கு ஸாவியாவின் தலைவர் தேசமான்ய மக்கி ஹாசிமும் ஸாவியாவின் பிரதம இமாமுமான கலிபதுல் குலபா மௌலவி அப்துர் றஹ்மானும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நிகழ்வில் விஷேட துஆப் பிரார்த்தனையை கலிபதுல் குலபா மௌலவி அப்துர் றஹ்மான் நிகழ்த்தினார்.

IMG_8446_Fotor