சிறுமி சேயா வழக்கு – கொண்டைய்யா விளக்கமறியலில் !

கொடதெனியா சிறுமி சேயா சதெவ்மி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

1522361575Untitled-1

சந்தேகநபரான கொண்டைய்யா என அழைக்கப்படும் துனேஷ் பிரயஷாந்தவை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மினுவான்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 23ம் திகதி கைதான இவர் நேற்று வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 

மேலும் சந்தேகநபர் கொலையை தானே செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.