சாய்ந்தமருது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் !

 

-எம்.வை.அமீர் – 

சாய்ந்தமருது உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் பொறியலாளர் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் விளையாட்டு மைதானங்களை பார்வையிடுவதர்க்காக 2015-09-26 அன்று வருகை தந்திருந்தனர்.

1_Fotor

மேற்படி குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களால் வரவேற்கப்பட்டு பிரதேச செயலகத்தில் வைத்து சாய்ந்தமருது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

 

குறித்த நிகழ்வில் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர்,எம்.ஐ.எம்.பிர்தௌஸ் மற்றும் ஏ.நஸார்டீன் உள்ளிட்டவர்களும் நில அளவையாளர் எம்.ஏ.சித்தீக் பொறியலாளர் இபத்துல் கரீம் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள் சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி ஏ.எல்.ஏ.மஜீத் உள்ளிட்டவர்களும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

4_Fotor

சாய்ந்தமருது விளையாட்டு மைதானத்துக்கு விஜயம் செய்த குழுவினர் மைதான அபிவிருத்தியின் ஆரம்பகட்டமாக மைதானத்தை மண்ணிட்டு மூடுவதற்கான உத்தரவாதமளிக்கப்பட்டது.