ஆந்திரா புதிய தலைநகருக்கு அக்டோபர் 22-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் !

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

modi

அடிக்கல் நாட்டு விழா பணிகள் குறித்து தலைநகர ஆலோசனைக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகரம் அமைக்கப்படுவதற்காக விஜயதசமி தினமான அக்டோபர் 22-ம் தேதி அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த நகருக்கான பூமி பூஜை ஏற்கனவே நடந்து விட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். 
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அமராவதி.