விசா­ல­மான “மார்கோ போலே” கப்பல் கொழும்பு வந்­தது !

 இலங்­கைக்கு முதன் முத­லாக விசா­ல­மான கொள்­கலன் தாங் கிக் கப்பல் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்புத்துறை முகத்தை வந்­த­டைந்தது. பிரிட் டிஷ் கொடியின் கீழ் பய­ணிக்கும் “மார்கோ போலே” என்ற இக் கப்­பலை வர­வேற்கும் நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்­பல்துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க கலந்து கொண்டார்.


வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்த இக் கப்­பலில் பெருந்தொகையான கொள்­க­லன்­களை களஞ்­சி­யப்­ப­டுத்த முடியும். பிரிட்டிஷ் கொடியின் கீழ் பய­ணிக்கும் இக் கப்பல் 2012 ஆம் ஆண்டில் முதல் முறை­யாக வெள்­ளோட்டம் விடப்­பட்­டது.

இக் கப்­பலின் உயரம் 29.9 மீற்­ற­ராகும். இதற்கு முன்னர் இலங்­கைக்கு வந்த விசா­ல­மான கொள்­கலன் தாங்கிக் கப்பல் நுனiவா அயசளம கப்­ப­லாகும். இக் கப்­பலில் 15550 கொள்­க­லன்­களை களஞ்­சி­யப்­ப­டுத்த முடியும்.

இக்­கப்­பலை வர­வேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க கருத்து தெரி­விக்­கையில்,

 ஆசி­யாவில் கொள்­க­லன்­களை கையாளும் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை துறை­முகம் அபி­வி­ருத்தி செய்­யப்­படும். அதற்­காக கொழும்புத் துறை­மு­கத்தின் அடிப்­படை வச­திகள் மேம்­ப­டுத்­தப்­படும்.

சீனா தொடக்கம் ஐரோப்பா வரையில் கடல் மார்க்­கத்தின் பிர­தான மத்­திய நிலையம் கொழும்புத் துறை­மு­க­மாகும். இதனால் எமது நாட்டின் அனைத்து துறை­மு­கங்­க­ளையும் கொள்­க­லன்­களை கையாளும் துறை முகங்­க­ளாக மேம்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் வாகன மீள் இறக்­கு­ம­தியே இடம்­பெ­று­கி­றது. கடந்த காலங்­களில் இங்கு பிரச்­சி­னைகள் காணப்­பட்­டதால் முத­லீட்­டா­ளர்கள் இங்கு வர­வில்லை.
ஆனால் இன்று அனைத்தும் மாறி­விட்­டது. கடந்த 6 மாத அரை­வாசிப் பகு­திக்குள் எமது துறை­முகம் அதிக பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை கண்­டுள்­ளது.

இது நாம் பெற்ற வெற்­றி­யாகும். அத்­தோடு துறை­மு­கங்கள் மேம்­ப­டுத்­தவும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வருகிறது. பெரும் ஆதாயத்தை பெற்றுக் கொள்ளும் விதத்தில் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.