கொத்மலை மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு !

கொத்மலை வெதமுல்ல லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

Kotmale-Landslide

லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் நேற்று (25) ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமற்போயிருந்த ஒருவருடைய சடலம் இன்று (26) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காணாமற்போயுள்ள மேலும் ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.